News September 10, 2025
BREAKING: இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையா?

கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, முதல் மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், அந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Similar News
News September 10, 2025
நேபாள இடைக்கால அரசு தலைவர் தேர்வு

நேபாளத்தின் இடைக்கால அரசு தலைவராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஊழல் முறைகேடு, சமூக வலைதளங்களுக்கு தடை ஆகியவற்றை எதிர்த்து அந்நாட்டில் இளைஞர்களின் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமராக இருந்த சர்மா ஒலி, குடியரசு தலைவர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது இடைக்கால அரசு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
News September 10, 2025
கள் இறக்க அனுமதி தராது ஏன்? EPSயிடம் விவசாயி கேள்வி

EPS தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. உங்கள் ஆட்சியில், கள் இறக்க அனுமதி தராதது ஏன் என கேட்டு விவசாயி ஒருவர் அதிமுகவினரிடம் வாக்குவாதம் செய்தார். உடனடியாக தலையிட்ட EPS, கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்களுக்கு எது நல்லது என பார்த்துதான் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும், தனிநபரின் லாப நஷ்டத்தை பார்க்கக்கூடாது என்றும் விளக்கமளித்தார்.
News September 10, 2025
BREAKING: விடுமுறை.. செப்.12 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

வார விடுமுறையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசலின்றி செல்ல ஏதுவாக சுமார் 1,000 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, செப்.12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.