News April 11, 2024
மார்ட்டினுக்கு எதிராக ED விசாரிக்க இடைக்காலத் தடை

தேர்தல் பத்திர சர்ச்சையில் சிக்கிய லாட்டரி கிங் மார்ட்டினுக்கு எதிரான ED வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே தனக்கு எதிராக CBI பதிவு செய்த வழக்கு விசாரணை முடியும் வரை, ED விசாரிக்கக் கூடாதென உத்தரவிடக்கோரி மார்ட்டின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Similar News
News April 25, 2025
6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
இன்சூரன்ஸில் பயங்கரவாத மரணமும் உள்ளடங்குமா?

‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
News April 25, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்.. இபிஎஸ் வியூகம்

கூட்டணி தொடர்பாக மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். கூட்டணி குறித்து கவலைப்படாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். இபிஎஸ் குறிப்பிடும் சில கட்சிகள் எவையாக இருக்கும்?