News September 10, 2025
மயிலாடுதுறை: நாளை மின்தடை அறிவிப்பு

சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன்கோயில் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.,11) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக சீர்காழி முழுவதும் புங்கனூர், சட்டநாதபுரம், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்காடு, திருப்புன்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம்முக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம் நகர், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT
Similar News
News September 10, 2025
மயிலாடுதுறை: Bank Account-யில் பணம் காணவில்லையா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
மயிலாடுதுறை கலெக்டர் திடீர் ஆய்வு

சீர்காழி அருகே சேந்தங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டார். ஆசிரியர்களின் கற்பிக்கும் முறைகளை பார்வையிட்டு மாணவ மாணவியர்களை பாட புத்தகங்களை வாசிக்க செய்து அவர்களின் கற்றல் திறனையும் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு தேவையான குடிநீர் கழிவறை மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
News September 10, 2025
மயிலாடுதுறையில் பிடிக்கப்படும் தெரு நாய்கள்

மயிலாடுதுறை நகராட்சியில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றிதிரிகின்றன கடந்த மாதம் 20-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்த சம்பவம் நடைபெற்றதால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மயிலாடுதுறை நகராட்சி சுகாதார அலுவலர்கள் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக நாய்கள் பிடிக்கும் பணி நேற்று தொடங்கியது. அவற்றிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கண்காணிப்பிற்கு பிறகு அதே இடத்தில் விடப்படும்.