News September 10, 2025
புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து ஆலோசனை

புதுச்சேரியில் தெரு நாய்களை பிடிப்பது குறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அனுமதியில்லாமல், வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்போர் மீது அபராதம் நடவடிக்கை எடுப்பது, நகர மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்களை பெருக்கத்தை தடுக்க நகராட்சி மற்றும் கால்நடைதுறை மூலம் குழுக்கள் அமைத்து கருத்தடை செய்வது பற்றி ஆலோனை நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 10, 2025
கடற்கரையில் ஆண் பிணம். போலீசார் விசாரணை

காரைக்கால் நிரவி கருக்களாச்சேரி கடற்கரையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த நிரவி போலீசார் விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.