News September 10, 2025
சிவகங்கை: பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில், 2025-26 ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் நேரடித் தனித் தோ்வா்களும், 2012-க்கு முன்னர் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் செப்-19 ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகத்தை நேரில் அணுகி அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
சிவகங்கை: தலைதூக்கிய அரிவாள் கலாச்சாரம்; மக்கள் அச்சம்.!

சில தினங்களுக்கு முன்பு மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரில் 9 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாலிபரை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இச்சம்பவம் நடந்த மறுநாளே, மீண்டும் மானாமதுரையில் 3 பேர் கும்பல் இரவு நேரத்தில் டூவீலரில் வந்து வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு நின்ற 2 பேரை வெட்டினர். இது போன்ற சம்பவங்களால் அச்சமடைந்துள்ள மக்கள், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர்.
News March 8, 2026
சிவகங்கை: வெட்டு காயங்களுடன் மாற்றுத்திறனாளி மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள கொம்படி மதுரை கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி ஜான் பிரிட்டோ. இவர் உடலில் வெட்டு காயங்களுடன் வாணி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு அருகே கிடந்துள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை வெட்டியவர்கள் யார் என்பது குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 8, 2026
சிவகங்கை: வெட்டு காயங்களுடன் மாற்றுத்திறனாளி மீட்பு.!

இளையான்குடி அருகே உள்ள கொம்படி மதுரை கிராமத்தை சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி ஜான் பிரிட்டோ. இவர் உடலில் வெட்டு காயங்களுடன் வாணி கிராமத்தில் உள்ள மயானத்திற்கு அருகே கிடந்துள்ளார். அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை வெட்டியவர்கள் யார் என்பது குறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


