News September 10, 2025
ரஞ்சி கோப்பை: TN அணி அறிவிப்பு

அக்டோபர் மாதம் தொடங்கும் ரஞ்சி கோப்பைக்கான TN அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீசன் தலைமையிலான அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், பாபா இந்திரஜித், ஷாருக் கான், விமல், சச்சின் பி, ஆண்ட்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், ஹேம்சுதேசன், திரிலோக், அஜிதேஷ் இடம்பெற்றுள்ளனர். TN அணி ரஞ்சி கோப்பையை வென்று 37 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த அணி கோப்பையை வெல்லுமா?
Similar News
News September 10, 2025
ராணுவ ஆட்சி என்றால் என்ன?

நேபாளத்தில் தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. ராணுவ ஆட்சி என்றால் என்ன தெரியுமா? நாட்டில் அரசியல் குழப்பம், உள்நாட்டு போர் போன்ற சூழல்களில் நிலைமை கைமீறிப் போனால், ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் நிலையே ராணுவ ஆட்சியாகும். சட்டம், நீதி, நிர்வாகம் அனைத்துமே ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும். ராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சியாக மாறும் ஆபத்து இதில் உண்டு. இந்தியாவில் இப்படி ஏற்படாது. ஏன் தெரியுமா?
News September 10, 2025
நடிகை நயன்தாராவுக்கு அதிர்ச்சி

நயன்தாராவின் ஆவணப்பட சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. NRD பட காட்சியை பயன்படுத்தியதாக, தனுஷ் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, சந்திரமுகி பட காட்சியை பயன்படுத்தியதாக, ₹5 கோடி கேட்டு AP இண்டர்நேஷனல் நிறுவனம் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளது. இதற்கு, அக்.6-க்குள் பதிலளிக்குமாறு ஆவணப்படம் தயாரித்த டார்க் ஸ்டூடியோவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருப்பது நயன்தாரா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 10, 2025
பலிகடாவாகும் அரசுப் பள்ளிகள்: அண்ணாமலை

திருச்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, அங்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தப்பட்டதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவதாக கூறி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் சாடியுள்ளார்.