News September 10, 2025
திருச்செந்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட மகாராஜா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று (09.09.2025), நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சிபர் சுகுமாறன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர் ஆகியோர் உள்ளனர்.
Similar News
News September 10, 2025
தூத்துக்குடி: வங்கி வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<
News September 10, 2025
தூத்துக்குடியில் 21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோர்ட்டு பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் புதிய பணியிடங்களில் பணி நியமனம் செய்தும், நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 21 துணை தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News September 10, 2025
தூத்துக்குடி: குத்திக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திரேஸ்புரம் மாதவர் நாயர் காலனியைச் சேர்ந்த முனியசாமி தனது பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக கடந்த 17.6.2022 அன்று சின்னத்தம்பியின் அண்ணன் மாரி சக்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முனியசாமி திரேஸ்புரம் மலர்மண்டபம் அருகே வரும்போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் சின்னத்தம்பி,கருப்புசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.