News September 9, 2025

மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

image

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதியாக C.P.ராதாகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமனுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியுள்ளார்.

Similar News

News September 10, 2025

மூலிகை: பசலைக்கீரையும் பலவித நன்மைகளும்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும்.
*ஃபோலேட் இருப்பதால், பசலைக்கீரையை தவறாமல் சாப்பிட்டால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
*லுடின் நிறைந்திருப்பதால், கண் புரை & இதர கண் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.
*பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால் மூட்டுகளில் வலி குறையும். Share it to friends.

News September 10, 2025

ஹீரோயினே இல்லாத காதல் படத்தை இயக்கும் பிரேம்குமார்

image

விக்ரமை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் அறிவித்தார். ஆனால், இதன் ஸ்கிரிப்ட் பணிகளுக்கு நேரமெடுக்கும் என்பதால், ஃபஹத் ஃபாசில் உடன் இணையவுள்ளாராம். இது குறைந்த கேரக்டர்களை கொண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளதாம். இதனையடுத்து, 9 கேரக்டர்களைக் கொண்டு அட்வெஞ்சர் படம், ஹீரோயின் இல்லாமல் காதல் படம் என அடுத்தடுத்து படம் இயக்கவுள்ளதாக பிரேம் கூறியுள்ளார்.

News September 10, 2025

45 மாதங்களில் 6,700 கொலைகள்: H.ராஜா தாக்கு

image

மீண்டும் திமுக அரசு அமைந்தால் அடுத்த தலைமுறை அழிந்துபோகும் என்று H.ராஜா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 45 மாதங்களில் 6,700 கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் CM ஸ்டாலின் பெரியார் படத்தை திறந்து வைத்த நிலையில், பணம் கட்டினால் அங்கு யார் வேண்டுமானாலும் படத்தை திறந்து வைக்கலாம், கூட்டம் நடத்தலாம் என கடுமையாக சாடினார்.

error: Content is protected !!