News September 9, 2025
ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 9) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
Similar News
News September 10, 2025
ஈரோடு: IMPORTANT மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 2025 முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி கட்டணம், விடுதியில் தங்கி பயிலும் விடுதி கட்டணத்தை தாட்கோ ஏற்கும். தகுதியானோர், www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு 0424-2259453 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 10, 2025
ஈரோடு: NO EXAM ரயில்வேயில் 2418 பணியிடங்கள்!

ஈரோடு மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
ஈரோட்டில் அதிரடி 4 பேர் கைது!

சென்னிமலையை அடுத்த மாதேஸ்வரா நகர் அசோக் வயது 26 முன்பு விரோதம் காரணமாக நேற்று வீட்டில் இருந்த அசோக்கை அரவிந்த் கார்டன் பகுதியில் சேர்ந்த கணேசன், பி ஆர் எஸ் ரோடு தினேஷ்குமார் ,பி கே புதூர் பாரதி, காந்திநகர் மோகன்ராஜ் என நான்கு பேரும் அசோக் வீட்டுக்குச் சென்று கைகளாலும், ரிப்பர் கட்டையாலும் தாக்கியுள்ளனர்.இந்நிலையில் அசோக் அளித்த புகாரின் படி 4 பேரையும் சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.