News September 9, 2025
INSPIRING: பிச்சை எடுத்தவர் Photo Journalist ஆன கதை!

மும்பை ரயில்களில் பிச்சை எடுத்த ஜோயா தாமஸ், இந்தியாவின் முதல் திருநங்கை Photo Journalist ஆக உருவெடுத்துள்ளார். பிச்சை எடுத்த பணத்தில் கேமரா வாங்கியவர், திருநங்கைகளின் வாழ்க்கையை பதிவு செய்து வந்தார். ஒரு குறும்படத்தில் நடித்து ஃபேமஸான அவருக்கு, உள்ளூர் ஊடகம் Photo Journalist வாய்ப்பு கொடுத்தது. லாக்டவுனில் வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஆவணம் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார்.
Similar News
News September 10, 2025
இறங்கி வந்த டிரம்ப்; PM மோடி கொடுத்த பதில்

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக டிரம்ப் கூறியதற்கு PM மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவும் USA-வும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்ட அவர், டிரம்ப் உடன் பேச ஆவலோடு இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மக்களின் வளமான எதிர்காலத்தை நோக்கி இருநாடுகளும் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், IND-USA இடையேயான உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 10, 2025
ட்ரெண்டிங் ஆகும் விஜய் ❤️PHOTO❤️

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், வரும் 13-ம் தேதி முதல் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். இந்நிலையில், தவெக கொடியை விஜய் முகத்தில் கட்டுவதுபோல் இருக்கும் PHOTO-வை ட்ரெண்டிங் செய்யும் தவெகவினர், சனிக்கிழமை சம்பவம் இருக்கிறது என பதிவிடுகின்றனர். திமுகவின் கோட்டையாக கருதப்படும் திருச்சியில் முதல் மக்கள் சந்திப்பை நடத்தும், விஜய்யின் டார்கெட் திமுகதான் என்று கூறப்படுகிறது.
News September 10, 2025
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே நிர்வகிக்க முடியாது. அதற்கு சரியான உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படாமல் பராமரித்து, நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.