News September 9, 2025

2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

image

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 6, 2026

சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

image

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.

News March 6, 2026

மீண்டும் போடியில் OPS போட்டியா?

image

தேனி போடிநாயக்கனூரில் OPS போட்டியிட, மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அத்துடன் போடி, கம்பம் (அ) ஆண்டிபட்டியில் தான் போட்டியிடவும் அவர் விருப்பமனு பெற்றுள்ளார். 2021-ல் தேனியில் 3 தொகுதிகளில் திமுக வென்றபோதும், போடியில் OPS வென்றார். தன்னுடைய சமூக மக்கள், உறவினர் அதிகமிருக்கும் பகுதி என்பதால், இம்முறை திமுக சார்பாக போட்டியிட்டாலும் OPS வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

42 பற்களை கொண்ட மனிதன்.. கின்னஸ் உலக சாதனை!

image

32 பற்களை கொண்டவன் மனிதன் என்றால், இவர் ஒரு அசாத்திய மனிதனே. மலேசியாவை சேர்ந்த பிரதாப் முனியாண்டி(33) என்பவருக்கு மொத்தமாக 42 பற்கள் உள்ளதாம். மேல் வரிசையில் 20 பற்களும், கீழ் வரிசையில் 22 பற்களும் உள்ளதாம். இவரின் அதிசயத்தை ‘அதிக பற்களை கொண்ட நபர்’ என கின்னஸும் அங்கீகரித்துள்ளது. அவரின் போட்டோக்களும் வைரலாகி இருக்கும் நிலையில், மக்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

error: Content is protected !!