News April 11, 2024

70 ஆண்டுகளாக முடியாததை மோடி முடித்து காட்டினார்

image

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவே, பயங்கரவாதம் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரசால் முடியவில்லை. பயங்கரவாதத்தின் மூலத்தை அடியோடு அழித்து, 370வது பிரிவை பிரதமர் மோடி நீக்கியதாக கூறிய அவர், அதனால் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மை கண்டு பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News August 11, 2025

FLASH: நடிகை மீரா மிதுன் மனநல ஹாஸ்பிடலில் அனுமதி

image

மன அழுத்தம் காரணமாக நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2021-ல் பட்டியல் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மீரா மிதுன் கடந்த 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், கோர்ட்டில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் இந்த தகவலை கூறியுள்ளனர்.

News August 11, 2025

‘உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் இவர் தான்’

image

உலகின் தலைசிறந்த WK யார் என்றால் இப்போதைய ரசிகர்கள் தோனி என்பார்கள். ஆனால், சையது கிர்மானி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்று Ex கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார். கிர்மானியின் சுயசரிதை நூலான ‘Stumped: Life Behind and Beyond The Twenty-Two Yards’ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், 4 ஸ்பின்னர்கள் பந்துவீச கீப்பிங் செய்தவர், உலகக் கோப்பையை வெல்லவும் காரணமாக இருந்தவர் எனப் புகழ்ந்தார்.

News August 11, 2025

பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? EPS புதிய விளக்கம்

image

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், TN மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள்(ADMK – BJP) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

error: Content is protected !!