News September 9, 2025

கடன் ஆப்ஸ் மோசடி – மதுரை மாநகர காவல்துறை

image

மதுரை மாநகர காவல்துறை சார்பில் 26 கடன் செயலி மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் பெயரில் ஆப்களை பதிவிறக்கம் செய்து, தொடர்புகள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு மாற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே RBI அங்கீகரித்த ஆப்களிலேயே கடன் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News March 3, 2026

மதுரை: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 3, 2026

மதுரை மாவட்டத்தில் 33,958 போ் பிளஸ் 2 தோ்வு எழுதினா்

image

மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வை 33,957 மாணவ, மாணவிகள் எழுதினா். எஞ்சியுள்ள 546 போ் தோ்வை எழுதவில்லை. இதேபோல, 836 தனித்தோ்வா்களும் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில், 761 போ் எழுதினா்; எஞ்சிய 75 போ் தோ்வை எழுதவில்லை.

News March 3, 2026

மதுரை: பள்ளி மாணவி தற்கொலை; அதிர்ச்சி காரணம்

image

திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அழுத்தம் கொடுத்ததனால் விரக்தி அடைந்த மாணவி சரிதா நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(மாணவர்கள் தற்கொலை குறித்த எண்ணம் வந்தால் 104ஐ அழைக்கவும்; தற்கொலை தீர்வல்ல.!)

error: Content is protected !!