News September 9, 2025
15-வது துணை ஜனாதிபதி, 17-வது தேர்தல்: ஏன் தெரியுமா?

நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான 17-வது தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், 2 பேர் தலா 10 ஆண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்துள்ளனர். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: 1952 – 1962, முகமது ஹமீது அன்சாரி: 2007 – 2017 என பதவி வகித்துள்ளனர். எனவேதான், இது 17-வது தேர்தலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தற்போதைய தேர்தலில் CP ராதாகிருஷ்ணன், பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
Similar News
News March 11, 2026
அறிவித்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்! GOOD NEWS

தமிழ்நாடு அரசு உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத்தை ₹50,000-ஆக உயர்த்தியுள்ளது; இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தகுதியுள்ள உலமாக்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்கும் முன்பே விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பகிருங்கள் யாருக்காவது பயன்படும்
News March 11, 2026
உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(11.03.2026) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 118(₹10,844) உயர்ந்து $5,214 ஆக மாறியுள்ளது. மேலும், வெள்ளி 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $88-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையில் <<19342889>>நேற்று சவரனுக்கு ₹800<<>> உயர்ந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.
News March 11, 2026
உடனே நடவடிக்கை: ஐகோர்ட் வார்னிங்

தமிழகத்தில் அரசு உத்தரவுக்கு விரோதமாக ஆர்டர்லி நடைமுறை பின்பற்றுவதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், இதை அமல்படுத்தவில்லை என்றால் அதிகாரிகள் மீது பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


