News September 9, 2025

மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

image

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு 34-ல் உள்ள சிட்லபாக்கம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுகிறதா என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீதா பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உணவு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News March 7, 2026

செங்கை: சனி தோஷம் நீக்கும் அற்புத கோவில்

image

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அகத்தியருக்கு, சிவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்ததாகவும், சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த வகையான தோஷமாக இருந்தாலும், இங்கு வழிபட்டால் நிவர்த்தியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 7, 2026

பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?

News March 7, 2026

தவெக தலைவர் அறிவித்த வாக்குறுதிகள்

image

▶️திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்
▶️அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்
▶️மாணாக்கரின் தாய் (அ) பாதுகாவலருக்கு ரூ.15,000
▶️பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம்
▶️தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்
▶️பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart panic button

error: Content is protected !!