News September 9, 2025
விழுப்புரம்: பயணிகள் கவனத்திற்கு

பராமரிப்புப் பணி நடப்பதால், விழுப்புரம் – சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (வண்டி எண் 66046) பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் இந்த ரயில் விழுப்புரத்திற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:55 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Similar News
News November 17, 2025
விழுப்புரத்தில் 1,287 பேர் ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 46 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 13,313 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 12,026 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 1,287 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
விழுப்புரம்: இவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்!

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம். கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21-வது தவணை தொகையான 2,000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.
News November 17, 2025
விழுப்புரம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


