News September 9, 2025

கடலூர்: மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.மணலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரகோத்தமன் இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள டி.நெடுஞ்சேரியில் மேச்சலுக்கு சென்ற மாடுகள் வராததால் அதனைத் தேடி வயலுக்கு சென்ற நிலையில் திடீரென பெய்த மழையில் அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் புத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.19) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 131.6 மி.மீ, பண்ருட்டியில் 130 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 11.1 மி.மீ, விருத்தாச்சலத்தில் 7.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி 22 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14.2 மி.மீ, கடலூர் 27.7 மி.மீ, தொழுதூரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

News September 19, 2025

கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச இலகுரக வாகன (Light Motor Vehicle – LMV) ஓட்டுநர் பயிற்சி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்.19) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான நேர்காணல் செப்.25-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-796183 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 19, 2025

கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!