News September 9, 2025
BREAKING: தி.மலை- மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தி.மலை மாவட்டம் சின்னக்காயம்பட்டு கிராமத்தில் மின் கம்பம் பழுதுபார்க்க சென்ற சேகர் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஒருவரின் நிலத்திற்கு மின் தடை ஏற்பட்டதால் அதை சரிசெய்ய சென்றபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக எண்ணி கம்பியை தொட்டபோது இந்த விபத்து நிகழ்ந்தது. குறிப்பிட்ட மின் கம்பத்திற்கான டிரான்ஸ்ஃபார்மருக்கு பதிலாக, வேறு டிரான்ஸ்ஃபார்மரை அணைத்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News September 10, 2025
தி.மலை: அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
தி.மலை:குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம்

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் (ஓய்வு) தலைமையில் கலெக்டர் க.தர்ப்பகராஜ், முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிரிவலப்பாதையில் மலை மற்றும் குளங்களின் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், வருவாய்த்துறையினர், வனத்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.