News September 9, 2025

கருப்பந்துறையில் மின்னல் தாக்கி நடந்த விபரீதம்!

image

கருப்பந்துறையைச் சேர்ந்த பாலம்மாள்(60) மற்றும் உய்க்காட்டான்(14) நேற்று மாலை கருப்பந்துறை இந்திரா நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரத்தை மின்னல் தாக்கியதில் மரக்கிளைகள் முறிந்து பாலம்மாள் மற்றும் உய்க்காட்டான் மீது விழுந்ததில் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 ஆடுகள் இறந்தன.

Similar News

News September 9, 2025

துணை ஜனாதிபதிக்கு நயினார் வாழ்த்து

image

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.

News September 9, 2025

நெல்லையில் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்

image

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News September 9, 2025

காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!