News April 10, 2024
குடிபோதை வாக்காளர்களுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

வாக்காளர்கள் குடிபோதையில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை கோரிய மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆந்திராவைச் சேர்ந்த ஜனவாகினி கட்சி இதே கோரிக்கைக்கு தொடர்ந்த வழக்கை பிப்.28ஆம் தேதி ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Similar News
News January 21, 2026
இன்று மாலை தவெக பிரசாரக் குழு கூட்டம்

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
காங்., செயற்குழு கூட்டத்தில் MP-க்கள் பங்கேற்காதது ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 MP-க்கள் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் டெல்லியில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
News January 21, 2026
₹10 லட்சம் கோடி இழப்பு

ஐரோப்பா மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளின் சரிவு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மூலதனம் சுமார் ₹10 லட்சம் கோடி சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு இது பெரும் இழப்பு.


