News September 9, 2025

கிருஷ்ணகிரி: ஜாக்டோ-ஜியோ போராட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று (செப்.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2003, ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News

News March 7, 2026

கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய முக்கிய புள்ளிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. குடிசதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குரு, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 7, 2026

லாரி மோதியதில் பள்ளி மாணவர் பலி

image

போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சபரி மற்றும் அருண் பிரசாத் பள்ளி மாணவர்கள். இவர்கள் இருவரும் மா-5 இருசக்கர வாகனத்தில் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் அருண் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். சபரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

கிருஷ்ணகிரியில் துடிதுடித்து பலி

image

கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லப்பா. இவர் கடந்த மார்ச் 5ம் தேதி பைக்கில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!