News September 9, 2025
வந்தே பாரத் ரயிலில் மேலும் 180 பயணிகள் பயணிக்கலாம்

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 8 பெட்டியில் இருந்து கடந்த ஜனவரி 15 முதல் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டியுடன் இயங்கி வருகிறது. தற்போதும் காத்திருப்போர் பட்டியல் உள்ளதால் 20 பெட்டிகளுடன் ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதனால் இந்த ரயிலில் 180 பேர் கூடுதலாக பயணிக்கலாம்.
Similar News
News September 10, 2025
நெல்லை: மின்சாரம் தொடர்பான புகாரா?

நெல்லையில் சமீபத்தில் ஒருவருக்கு ரூ.1 கோடியே 60 இலட்சம் மின் கட்டணமாக வந்தது. விசாரணையில் அது பிழை என கண்டறியப்பட்டது. ஆகவே மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL APP) பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
நெல்லை: சுய உதவிக் குழு பெண்களுக்கான வேலை வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு; சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவி குழுக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு 0462-2903302, 7708678400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
நெல்லை ஆசிரியர்களுக்கு கடைசி வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வருகிற நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 8ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. மாலை 5 மணிக்குள் விருப்பமுள்ள நெல்லை மாவட்ட ஆசிரியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். *ஷேர்