News September 9, 2025

தூத்துக்குடி: 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை வழக்குகளில் போலீசார் விசாரணை நடத்தி அதற்கான குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் பல்வேறு கொலை வழக்குகள் நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் 17 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 10, 2025

தூத்துக்குடியில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை (10.09.2025) நடைபெற உள்ளது. மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பிரிவுகளில் பொதுமக்கள் மனுக்கள் பெறப்படும். இம்முகாம் மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

News September 10, 2025

திருச்செந்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட மகாராஜா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் இன்று (09.09.2025), நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சிபர் சுகுமாறன், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தர் ஆகியோர் உள்ளனர்.

News September 9, 2025

கோவில்பட்டி: வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை

image

கோவில்பட்டி எஸ்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவரது மனைவி காயத்ரி துபாயில் வேலை பார்த்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சுரேஷ் அவரது மனைவி காயத்ரியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அப்போது மனையுடன் சண்டை போட்டுவிட்டு தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போனை ஆப் செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!