News September 9, 2025
தவெகவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர், தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவிற்கு தெரிவித்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க EPS-ஐ அவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதறவைத்திருக்கிறதாம்.
Similar News
News September 9, 2025
ராதாகிருஷ்ணனுக்கு PM, ஜனாதிபதி வாழ்த்து

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு PM மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொதுவாழ்வில் உங்களுக்கு இருக்கும் அனுபவம், நாட்டை முன்னோக்கி அழைத்து செல்வதில் பெரும் பங்கு வகிக்கும் என முர்மு வாழ்த்தியுள்ளார். அதேபோல், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும், நாட்டின் சிறந்த துணை ஜனாதிபதியாக CPR இருப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
INSPIRING: பிச்சை எடுத்தவர் Photo Journalist ஆன கதை!

மும்பை ரயில்களில் பிச்சை எடுத்த ஜோயா தாமஸ், இந்தியாவின் முதல் திருநங்கை Photo Journalist ஆக உருவெடுத்துள்ளார். பிச்சை எடுத்த பணத்தில் கேமரா வாங்கியவர், திருநங்கைகளின் வாழ்க்கையை பதிவு செய்து வந்தார். ஒரு குறும்படத்தில் நடித்து ஃபேமஸான அவருக்கு, உள்ளூர் ஊடகம் Photo Journalist வாய்ப்பு கொடுத்தது. லாக்டவுனில் வெளிமாநில தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஆவணம் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார்.
News September 9, 2025
தமிழ்நாட்டில் இருந்து 3-வது துணை ஜனாதிபதி

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், இதுவரை 3 துணை ஜனாதிபதிகளை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அடுத்ததாக, ராமசாமி வெங்கட்ராமன் 1984 முதல் 1987 வரை அப்பதவி வகித்தார்.