News September 9, 2025
விழுப்புரம் பெயர் காரணம் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டத்தின் பெயர்க் காரணம் குறித்த இரண்டு முக்கியக் காரணங்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒன்று, வில் மற்றும் அம்பு வீரர்கள் வசித்த பகுதி என்பதால் “வில் அம்பு புரம்” என அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் என மருவியது. மற்றொன்று, விஜயநகர மன்னர்கள் இப்பகுதியை ஆண்டபோது “விஜயபுரம்” எனப் பெயரிடப்பட்டு, அது நாளடைவில் விழுப்புரம் என மாறியதாக கூறப்படுகிறது.
Similar News
News September 9, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News September 9, 2025
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது

விழுப்புரம் அண்ணா நகர் பகுதியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சபாபதி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.