News September 9, 2025

நீலகிரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

image

ஊட்டி அருகே முட்டிநாடு கிராமத்தை சுற்றி சிவசெந்துார் நகர், செல்விப் நகர், ஈஸ்வர நகர் என, 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து ஊட்டி, குன்னுாருக்கு அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.கிராமத்திற்கு சீராக பஸ் இயக்க கோரி கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News September 9, 2025

நீலகிரி: இரவு ரோந்து அலுவலர்களின் பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என்று நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

துணை முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள்!

image

சென்னையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட திமுக அமைப்பாளர்கள் சந்தித்தனர் . நீலகிரி மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஹெச் சையத் மஞ்சூர் குன்னூர் நகர முப்பது வார்டுகளில் உள்ள 30 கிளைகளின் இளைஞர் அணி மற்றும் துணை அமைப்பாளர்கள் படிவ பட்டியலை தமிழக துணை முதலமைச்சரிடம் வழங்கினர்.

News September 9, 2025

நீலகிரியில் யானை மிதித்துக் கொன்றதால் மறியல் !

image

கூடலூர் ஓவேலி பார்வுட் பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் சம்சுதீன் என்ற தொழிலாளி பலியானதால், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி யானை மனித மோதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் போலீசார் இவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

error: Content is protected !!