News September 9, 2025
யார் அடுத்த துணை ஜனாதிபதி?

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 MP-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பார்லிமென்ட்டில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுமார் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. NDA கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் களத்தில் உள்ளனர்.
Similar News
News September 9, 2025
தனுஷின் முதுகில் குத்த விரும்பாத ஜிவி

தனுஷ் படங்களுக்கு இசையமைக்கும் உங்களுக்கு, தனுஷுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதா என ஜி.வி.பிரகாஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ராயன்’ படத்தில் தனது தம்பியாக நடிக்க தனுஷ் கேட்டதாகவும், ஆனால், அது அவரை முதுகில் குத்தும் கதாபாத்திரம் என்பதால் நடிக்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
News September 9, 2025
துணை ஜனாதிபதியின் பணிகள்

ஜனாதிபதிக்கு அடுத்து 2-வது உயரிய அரசமைப்பு பதவி துணை ஜனாதிபதி பதவிதான். ராஜ்யசபாவிற்கு தலைவராக அவையை வழிநடத்துவது இவரின் பொறுப்பு. பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு திடீர் மரணம் ஏற்பட்டால், அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் வரை (அதிகபட்சம் 6 மாதங்களுக்கு) அவரின் பணிகளையும் துணை ஜனாதிபதியே மேற்கொள்வார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? துணை ஜனாதிபதி பதவிக்கு சம்பளம் கிடையாது.
News September 9, 2025
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

கோவையை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா கவர்னராக உள்ளார். கோவை தொகுதியில் 1998 முதல் 2004 வரை MP-யாக இருந்த இவர், 2003 – 2006 வரை TN பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், 2004, 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் கோவையில் களமிறங்கியவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக நின்று, வெற்றி பெற்றுள்ளார்.