News September 9, 2025

தென்காசி மாவட்ட காவல்துறையின் விழிப்புணர்வு பதிவு

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக சமூக வலைதளத்தில் இருந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து பகிரப்பட்டுள்ளது. “சாலையில் நடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என்ற எச்சரிக்கை மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செய்தியை புகைப்படத்துடன் அனைவரும் புரிந்து கொள்ளும்படி பகிர்ந்துள்ளது.

Similar News

News April 11, 2026

தென்காசி: ஆலங்குளத்தில் 226 பேர் மீது வழக்குப்பதிவு

image

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரை சேர்ந்த பனைத்தொழிலாளி மணிகண்டன் மீது SI இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து நாதக வேட்பாளர் பால்ராஜ், MP ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 14 பெண்கள் உட்பட 226 பேர் மீது சட்டவிரோத கூடுகை, சாலை மறியல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News April 11, 2026

தென்காசி: TVK நிர்வாகி காரில் பணம் பறிமுதல்

image

தமிழகத்தில் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடியில் வாகன சோதனை செய்த போது காரில் வந்த தவெக வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமாரிடம் ஆவணமின்றி இருந்த ரூ.1,37,500 பறிமுதல் செய்யப்பட்டு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 11, 2026

கடையம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி

image

ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் வழக்கம் போல் ரயில்வே மேம்பாலம் அருகே வயல் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது திடீரென நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் அவர் மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!