News September 9, 2025
கடலூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகனம் வழங்கல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை இன்று (08.09.2025) வழங்கினார். அப்போது தனித்துணை ஆட்சியர் தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 19, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.19) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 131.6 மி.மீ, பண்ருட்டியில் 130 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 11.1 மி.மீ, விருத்தாச்சலத்தில் 7.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி 22 மி.மீ, காட்டுமன்னார்கோவில் 14.2 மி.மீ, கடலூர் 27.7 மி.மீ, தொழுதூரில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News September 19, 2025
கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச இலகுரக வாகன (Light Motor Vehicle – LMV) ஓட்டுநர் பயிற்சி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்.19) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான நேர்காணல் செப்.25-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-796183 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News September 19, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!