News April 10, 2024
தேர்தலை நிறுத்தக் கோரி மனு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் ₹1500 கோடி மதிப்பிலான சொத்துகளை வேட்புமனுவில் காட்டவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜா மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Similar News
News January 27, 2026
ஈரோடு: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

ஈரோடு மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
News January 27, 2026
ஆப்கானில் புதிய சட்டம்.. வலுக்கும் எதிர்ப்பு

ஆப்கானில் புதிய குற்றவியல் நடைமுறை சட்டம் சர்ச்சையாக மாறியுள்ளது. இது மக்களை 4 வகுப்புகளாக பிரிப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த சட்டங்களின் படி, அறிஞர்கள் (முல்லாக்கள்), உயரடுக்கு (ஆட்சியாளர்கள்), நடுத்தர வர்க்கம் மற்றும் கீழ் வர்க்கம் என உள்ளது. முல்லாக்கள் தவறு செய்தாலும் தண்டனை இல்லை. ஆனால், இதர வகுப்பினருக்கு தண்டனை என்பதால் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
News January 27, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. வெளியானது முக்கிய தகவல்

‘ஜன நாயகன்’ வழக்கில், தனி நீதிபதியின் உத்தரவை சென்னை HC ரத்து செய்துள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வழக்கறிஞர் பராசரனுடன் படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. SC-ல் மேல்முறையீடு; தனி நீதிபதியிடம் மீண்டும் மனு தாக்கல் செய்வது அல்லது தணிக்கை வாரியத்திடம் மறு தணிக்கைக்கு செல்லலாமா என ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து படக்குழு விரைவில் முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.


