News September 9, 2025

விஜய் உயிரை கொடுத்து வேலை செய்யணும்: கருணாஸ்

image

கார்ப்ரேட் கம்பெனி போல் வீட்டிற்குள் இருந்தபடி விஜய் அரசியல் செய்வது பயனளிக்காது என கருணாஸ் விமர்சித்துள்ளார். திரைப்புகழை வைத்து மட்டுமே ஆட்சியை பிடிக்கலாம் என விஜய் நினைப்பது, தனக்கு நகைப்பை ஏற்படுவத்துவதாக அவர் கூறினார். விஜய் ஆட்சிக்கு வர நினைத்தால் மக்களின் பிரச்னைகளை அறிந்து அதற்காக உயிரை கொடுத்து வேலை செய்ய வேண்டும் எனவும் கருணாஸ் குறிப்பிட்டார்.

Similar News

News September 9, 2025

செங்கோட்டையன் டெல்லி சென்றது இதற்குத் தானாம்!

image

மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஹரித்வார் போவதற்கு டெல்லிக்கு புறப்பட்ட தனக்கு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது, ஆபிஸ், கல்வி நிலையங்கள் செல்வோரின் வசதிக்கேற்ப ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியதாக தெரிவித்தாா். ஹரித்வார் செல்லாமலேயே அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.

News September 9, 2025

நேபாளம் பற்றியெரிய இவர் தான் காரணம்

image

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதற்கு வித்திட்டவர் யார் தெரியுமா? சுடன் குருங் என்ற 36 வயது நபர். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஹமி நேபாள் என்ற NGO-வை நடத்திவரும் இவர், மாணவர்களை திரட்டி போராட்டத்தை தொடங்கினார். சோஷியல் மீடியாவில் தீவிர பிரசாரம் செய்தது ஜென் Z இளைஞர்களை திரட்ட உதவியது. இவருக்கு மேற்கத்திய நிறுவனங்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

News September 9, 2025

BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவு

image

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இரு அவைகளிலும் மொத்தம் 782 MP-க்கள் உள்ள நிலையில், 392 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார். NDA கூட்டணிக்கு இரு அவைகளிலும் சேர்த்து 422 MP-க்களின் ஆதரவு இருப்பதால், அதன் சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.

error: Content is protected !!