News September 9, 2025
புதுக்கோட்டையில் மரம் வெட்டினால் ரூ.5000 அபராதம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில பசுமை குழு சார்பில்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சாலை விரிவாக்கத்திற்கு பசுமைக் குழு அனுமதி பெறாமல் மரம் வெட்டினால் ஒரு மரத்திற்கு ரூ.5000 கட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பசுமை குழு தலைவர் கண்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 9, 2025
புதுகை: மருத்துவ முகாம் 1484 பேருக்கு சிகிச்சை!

பொன்னமராவதியில் நேற்று (செப்.8) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாடு (யூரியா கிரியாட்டினின்) பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 453, ஸ்கேன் 99, இருதய பரிசோதனை 1190, மேல் சிகிச்சை 142 பேரும் என 1480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் எங்கெல்லாம் நடைபெறுகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 10/9/2025 புதுகை வார்டு எண் 34 35 கலிப் நகர் பள்ளிவாசலிலும், அரிமளம் பகுதியில் விசாலாட்சி திருமணம் மண்டத்திலும், ஆவுடையார் கோவில் 8 ஊராட்சி ஒன்றியம் கரூர் யாதவ திருமண மண்டபத்திலும், மணமேல்குடி 9, ஊராட்சி பகுதிகளுக்கு கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்து பயன்படலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
புதுகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

புதுகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!