News September 8, 2025
நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டிலான 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை 50% மானியத்துடன் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு இன்று வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,தோட்டக்கலை துணை இயக்குனர் சிந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 9, 2025
BREAKING: ராணிப்பேட்டை- பாலியல் வழக்கில் 3பேர் கைது

ராணிப்பேட்டை தேங்கா பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தென்பெண்ணை அருகே காதல் ஜோடிகள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து காதலனைத் தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் உதவியுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இமயவர்மன் தலைமையில் தனிப்படை அமைத்து 3பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.
News September 9, 2025
ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

1. இங்கு <
2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..
4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.
News September 9, 2025
ராணிப்பேட்டை: மின் தடையா…? இதை பண்ணுங்க

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE