News April 10, 2024

காய்கறி விலை உயருகிறது

image

வெயிலின் தாக்கம் அதிகமாவதன் காரணமாக காய்கறி மற்றும் பழங்களின் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ₹50 உயர்ந்து ₹90க்கு (கோயம்பேடு சந்தை நிலவரம்) விற்பனை ஆனது. எலுமிச்சை கிலோ ₹80, பீட்ரூட் கிலோ ₹30, கத்திரிக்காய் கிலோ ₹30, கேரட் கிலோ ₹35, இஞ்சி கிலோ ₹110, உருளை கிழங்கு கிலோ ₹24, அவரைக்காய் கிலோ ₹40 என்று விற்பனை ஆகிறது.

Similar News

News August 11, 2025

BREAKING: நவம்பர் 1, 2-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

image

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்காக இன்று முதல் செப்டம்பர் 8 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

News August 11, 2025

உண்மையான நட்பு எங்கே?

image

நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகிவிடமாட்டார்கள். `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உண்மையான நட்புணர்வு கொண்ட நண்பர்கள் இக்காலத்தில் குறைவே. நுகர்வு கலாசாரமும், அதற்கான பணநாட்டமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதர்களை தங்களுக்குள் நெருங்கிப் பழகவிடாமல் தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்காக, பொழுதை போக்கும் நட்பாகவே உள்ளது. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்க best friend யார்?

News August 11, 2025

மகளிர் உரிமைத் தொகை.. இதனை மறக்க வேண்டாம்!

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு செயல்படாத பேங்க் அக்கவுண்டை தவறுதலாக கொடுத்துவிட்டால் கவலை வேண்டாம். முதலில் பேங்குக்கு சென்று அந்த அக்கவுண்டை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில், புதிய அக்கவுண்ட் தொடங்கி அதற்கான தகவலை தாலுகா ஆபிஸில் சமர்பிக்க வேண்டும். அதன்பின், மகளிர் உரிமைத் தொகை புதிய அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். SHARE IT.

error: Content is protected !!