News September 8, 2025
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்ன கண்ணாடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் எல்லைப்பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 10, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
கடலூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கடலூர் மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 10ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வன்னியர் திருமண மண்டபம் கடலூர், புஷ்பாவதி திருமண மண்டபம் காராமணிக்குப்பம், புயல் பாதுகாப்பு மையம் சின்னூர் புதுப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கானூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
News September 9, 2025
ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.