News September 8, 2025
பெரம்பலூர்: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய 04328 276317 என்ற எண்ணில் அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE NOW.
Similar News
News September 10, 2025
பெரம்பலூர்: போட்டோகிராபி, எடிட்டிங் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான போட்டோகிராபிங் மற்றும் எடிட்டிங் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www. tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04328 – 276317 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
பெரம்பலூர்: மானியம் அறிவித்த கலெக்டர்

தமிழ்நாடு அரசு கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கைவினை தொழிலாளர்கள், கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அவர்கள் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News September 10, 2025
காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று (செப்.,9) பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்றது.