News September 8, 2025

ஸ்டாலினின் கேடுகெட்ட ஆட்சி: அண்ணாமலை சாடல்

image

<<17644180>>ஏர்போர்ட் மூர்த்தி<<>> கைதுக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, கருணாநிதி ஆட்சி காலத்தைவிட கேடுகெட்ட ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருவதாக சாடியுள்ளார். தாக்குதல் நடத்திய விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த மூர்த்தியை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2006 – 11 ஆட்சி காலத்தைவிட இந்த ஆட்சி மோசமாக இருப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

அணி மாறி வாக்களித்த INDIA கூட்டணி MP-கள்

image

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் NDA வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் INDIA கூட்டணியின் 315 எம்.பி.க்கள் வாக்களித்ததாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவில் சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. எனவே, INDIA கூட்டணியின் 15 எம்.பி.க்கள் எதிரணி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தது உறுதியாகியுள்ளது.

News September 10, 2025

சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

image

துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக கொள்கைகளுக்கான தனது கடமைகளை சிபி ராதாகிருஷ்ணன் உறுதியுடன் நிறைவேற்றுவார் என நம்புவதாக X தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல EPS உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

இவங்களும் செல்லாத ஓட்டு போடுறாங்களாம்..!

image

படிக்காத பாமர மக்கள்தான் விவரம் தெரியாம செல்லாத ஓட்டு போடுறாங்கன்னு பார்த்தா, துணை ஜனாதிபதி எலெக்‌ஷன் வரை இந்த பிரச்னை இருக்கும் போலயே. இன்னைக்கு நடந்த எலெக்‌ஷன்ல, 767 பேர் மொத்தமா ஓட்டு போட்ருக்காங்க. அதுல சிபி ராதாகிருஷ்ணன் 452 ஓட்டு வாங்கிருக்காரு. சுதர்சன் ரெட்டி 300 ஓட்டு வாங்கிருக்காரு. மீதி இருக்கிற 15 செல்லாத ஓட்டாம். மாதிரி எலெக்‌ஷன்லாம் நடத்துறாங்க. அப்பவும் இப்படி நடந்தா எப்படி?

error: Content is protected !!