News September 8, 2025
திண்டுக்கல்லில் பிறந்த குழந்தையை குதறிய நாய்கள்!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே இன்று(செப்.8) பிறந்து ஒரு நாள் ஆன குழந்தையின் சிசு குப்பையில் வீசி சென்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த குழந்தையை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Similar News
News September 10, 2025
கனரா வங்கி சார்பில் பழுது பார்த்தல் பயிற்சி

திண்டுக்கல் அருகே நத்தம் சாலையில், சிறுமலை பிரிவு பகுதியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கான வீட்டு உபயோகபொருட்கள் பழுது பார்த்தல் பயிற்சி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இந்தபயிற்சி வகுப்பு வருகிற 20-ந்தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் கனரா வங்கியின் பயிற்சி மையத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News September 10, 2025
திண்டுக்கல் கோவிலில் துணை ஜனாதிபதி சாமி தரிசனம்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மீண்டும் அதே கோவிலுக்கு வருகை தந்து சி.பி. ராதாகிருஷ்ணன் அபிராமி அம்மனை தரிசனம் செய்தார்.
News September 10, 2025
திண்டுக்கல்லில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்

திண்டுக்கல்: இன்று செப்.10 உங்களுடன் ஸ்டாலின் முகாம் திண்டுக்கல் மாநகராட்சி வத்தலகுண்டுரோடு மதினா மண்டபம் பிரியாநகர், நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி மஞ்சநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ரெட்டியார்சத்திரம் சுள்ளெறும்பு சமுதாயக்கூடம், ஒட்டன்சத்திரம் பட்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முகாமினை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.