News April 10, 2024

கராச்சியில் குவிந்த 4 லட்சம் பிச்சைக்காரர்கள்!

image

கராச்சியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் குவிந்ததால், பாகிஸ்தான் போலீசார் திணறி வருகின்றனர். ரமலான் பண்டிகையை ஒட்டி பாகிஸ்தானில் பல்வேறு பகுதியில் இருந்து யாசகம் பெறுவதற்காக அங்கு பிச்சைக்காரர்கள் குவிந்துள்ளனர். இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் பலரும் கூட்டத்தில் ஊடுருவியதால் வழிப்பறி போன்ற குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போலீசார் கவலை அடைந்துள்ளனர்.

Similar News

News April 25, 2025

பஹல்காம் தீவிரவாதிகளில் 15 வயது சிறுவர்கள்!

image

கையில் துப்பாக்கிகளுடன் வந்த 2 சிறுவர்களே தங்களது தந்தையை கொன்றதாக, தீவிரவாத தாக்குதலில் பலியான ம.பி.யைச் சேர்ந்த சுஷிலின் மகன் ஆஸ்டன் தெரிவித்துள்ளார். 15 வயதான அந்த சிறுவர்கள், தனது தந்தையிடம் ‘கல்மா’ ஓதச் சொன்னதாகவும், அவர் கிறிஸ்டியன் என சொன்னதும், சுட்டுக் கொன்றதாகவும் ஆஸ்டன் கூறியுள்ளார். மேலும், முஸ்லிமா? என கேட்டுவிட்டே அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

image

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

News April 25, 2025

அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

image

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்‌ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

error: Content is protected !!