News September 8, 2025

பண்ருட்டி அருகே ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

image

பண்ருட்டி – திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று (செப்.7) ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 9, 2025

கடலூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் நாளை செப்டம்பர் 10ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வன்னியர் திருமண மண்டபம் கடலூர், புஷ்பாவதி திருமண மண்டபம் காராமணிக்குப்பம், புயல் பாதுகாப்பு மையம் சின்னூர் புதுப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கானூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!