News September 8, 2025

வந்தே பாரத் ரயிலில் பெட்டிகள் அதிகரிப்பு: பயணிகள் மகிழ்ச்சி

image

விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பெட்டிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 20-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனிமேல் அதிக பயணிகள் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த வழித்தடத்தில் அதிக பயணிகள் பயணம் செய்வதால், இந்த மாற்றம் ரயில் பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 9, 2025

விழுப்புரத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News September 9, 2025

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது

image

விழுப்புரம் அண்ணா நகர் பகுதியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சபாபதி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

News September 9, 2025

ஜனநாயக கடமை ஆற்றிய விழுப்புரம் எம்பி

image

டெல்லியில் இன்று செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் துவங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பதிவில் விழுப்புரம் நாடாளுமன்ற எம்பி துரை ரவிக்குமார் வரிசையில் நின்று ஓட்டளித்தார். மாலை 5 மணியுடன் முடியும் வாக்குப்பதிவுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை ஆறு மணி அளவில் துவங்கி நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!