News September 8, 2025

மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் செயற்கை கால் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (செப்.8) நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.75,000 மதிப்பிலான செயற்கைக் காலை வழங்கினார். உடன், அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.

Similar News

News November 17, 2025

விழுப்புரத்தில் 1,287 பேர் ஆப்சென்ட்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.16), தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2, 46 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத மொத்தம் 13,313 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 12,026 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்திருந்தனர். மீதம், 1,287 நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

விழுப்புரம்: இவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம். கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21-வது தவணை தொகையான 2,000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.

News November 17, 2025

விழுப்புரம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!