News September 8, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது செய்யப்படுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிராஜ் கான் என்ற அந்த நபர், இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்த ராணுவம், அவரிடம் இருந்து பாகிஸ்தான் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News September 9, 2025
2026 தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்டார் விஜய்

TVK தலைவர் விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் வரும் 13-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், வாரத்திற்கு ஒருமுறை என சனிக்கிழமைகளில் மட்டும் மக்களை அந்தந்த மாவட்டங்களில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கு காவல்துறை முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படும் நிலையில், அனுமதி வேண்டி அட்டவணையை டிஜிபி அலுவலகத்தில் N.ஆனந்த் சமர்பித்துள்ளார். இது விஜய்யின் முதல் அரசியல் சுற்றுப்பயணமாகும்.
News September 9, 2025
சற்றுமுன்: இபிஎஸ் உடன் இணைந்தனர்

ஈரோட்டில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்பில் இருந்து விலகியதாக கூறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று சேலத்தில் EPS-ஐ நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோபி அதிமுக நகர செயலாளர் கணேஷ், கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு தலைமையில் கோபி, அந்தியூர், பவானிசாகர் பகுதியை சேர்ந்த பலரும் மீண்டும் EPS-ன் பக்கம் திரும்பியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 9, 2025
24 வயது இளம் வீர ரத்தம் மண்ணில் உதித்த தினம்!

கார்கில் போரின் (1999) பரபரப்பான நிமிடங்களில், Point No 4875-ல் காயமடைந்த சக வீரரை காப்பாற்ற முயற்சித்தார் அந்த 24 வயது இளைஞர். அப்போது எதிர்பாரா விதமாக எதிரிகளால் சுடப்பட, வீர மரணம் அடைந்தார், இமாச்சலை சேர்ந்த இந்த இளம் வீரரான விக்ரம் பத்ரா. ‘வீர சக்ரா’ விருது வழங்கப்பட்ட இவரது வீர பயணத்தை தழுவியே விஷ்ணுவர்தனின் ‘Shershaah’ என்ற படம் (2021) எடுக்கப்பட்டது.