News September 8, 2025
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்
Similar News
News September 9, 2025
காஞ்சியில் இலவச பட்டாக்களை வழங்கிய துணை முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (9.9.2025) நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News September 9, 2025
துணை முதலமைச்சருக்கு சால்வை அணிவித்த காஞ்சி எம்எல்ஏ

காஞ்சிபுரம், செவிலிமேடு அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள இன்று (செப்.,9) வருகை தந்தார். துணை முதலமைச்சரை காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News September 9, 2025
காஞ்சியில் திமுக நிர்வாகிகளை சந்திக்கும் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.,8) காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.