News September 8, 2025
நாகர்கோவில்: அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம்

அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செப்.16 அன்று 11. மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக தெரிவிக்க வேண்டும் என குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
குமரியில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 சப்-இன்ஸ்பெக்டர்களை வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் பளுகல், களியக்காவிளை, இரணியல், மணவாளக்குறிச்சி, ஆரல்வாய்மொழி, ராஜாக்கமங்கலம், வெள்ளிச்சந்தை, கீரிப்பாறை, புதுக்கடை, கோட்டார், தெந்தாமரைக்குளம், கருங்கல் உட்பட 14 போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News September 9, 2025
குமரி: சிறுவன் அடித்துக் கொலை; தீவிர தேடுதல்

குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வி மகான் அபிநவ் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதில் தாயார் செல்வி மாயமான நிலையில் அவருடன் வாழ்ந்து வந்த செல்வ மதன் என்பவர் சிறுவனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 2 தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள்ள நிலையில் அதனை வாங்க கடந்த 7 நாட்களாக யாரும் முன் வரவில்லை.
News September 9, 2025
குமரி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT