News September 8, 2025

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் திடீர் வேலைநிறுத்தம்

image

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில், பரிசல் சவாரிக்குச் செப். 7-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பரிசல் ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பரிசல் ஓட்டிகளின் வாரிசுகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதனால், பரிசல் சவாரி செய்ய முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Similar News

News September 9, 2025

தர்மபுரி: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

image

தர்மபுரி மக்களே மழைக்காலம் என்பதால் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 9, 2025

தர்மபுரி: அரசு வேலை – நாளை கடைசி நாள்

image

தர்மபுரி மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், தற்போது நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு நவ.15ம் தேதி நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News September 9, 2025

தர்மபுரி இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!