News September 8, 2025

உத்திரமேரூர்: ஏரி சீரமைப்பிற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு

image

காஞ்சிபுரம், உத்திரமேரூர் இடையே செய்யாற்றின் குறுக்கே, மாகரல் பகுதியில் 2019-ல் ₹8 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் மதகுகள் கடந்த ஆண்டு பருவமழையில் சேதமடைந்தன. இதனால், காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயும் பாதிக்கப்பட்டது. இதை சீரமைக்க தற்போது ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 9, 2025

காஞ்சிபுரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 9, 2025

காஞ்சிபுரம்: வங்கியில் வேலை; ரூ.85,000 சம்பளம்

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, Assistant Manager என மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே <>இங்கே கிளிக்<<>> செய்து 21.09.2025 தேதிக்குள் Register பண்ணுங்க! இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 9, 2025

குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

image

காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகளில் விரைவில் ஆய்வுகள் நடைபெற உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை உத்தரவின் பேரில், குடிநீர் தரம் மற்றும் சுத்தம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!