News September 8, 2025
கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News September 8, 2025
SCIENCE: உங்கள் மூளைக்கு வலி தெரியாது. ஏன் தெரியுமா?

உடலில் எங்கு வலித்தாலும், அதை மூளையால் உணரமுடிகிறது. ஆனால், மூளையில் ஏற்படும் வலி நமக்கு தெரிவதே இல்லை. ஏனென்றால், மூளையில் வலியை உணரும் ‘நோசிசெப்டர்’ நரம்புகள் இல்லை. இதனால்தான் ஒருவர் விழித்திருக்கும்போதே மூளை சர்ஜரிகளை செய்யமுடிகிறது. இது உண்மையென்றால் தலைவலி எப்படி ஏற்படுகிறது என நீங்கள் கேட்கலாம். தலை & கழுத்திலுள்ள நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவதால்தான் தலைவலி ஏற்படுகிறது. SHARE.
News September 8, 2025
நாளை முக்கிய முடிவு… அறிவித்தது திமுக

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நாளை நண்பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ஸ்டாலின் திரும்பிய நிலையில், நாளை நடைபெறவுள்ள மா.செ. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள்

ஜனாதிபதி தேர்தல்களில் பலமுறை பாஜகவுக்கு கைகொடுத்த பிஜு ஜனதா தளம் கட்சி, இந்த முறை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. எந்த தரப்புக்கும் ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ள அக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என தெலங்கானாவின் பிஆர்எஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இக்கட்சிக்கு ராஜ்ய சபாவில் 4 எம்பிக்கள் உள்ளனர்.