News April 10, 2024

உதகையில் தேர்தல் வாக்களிப்பு விழிப்புணர்வு

image

உதகையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். பழங்குடியின தோடர், கோத்தர்களின் கலாச்சார நடனங்கள் மற்றும் பேரணி நடைபெற்றது. நீலகிரி SP சுந்தரவடிவேல், கூடுதல் ஆட்சியர் கெளசிக் மற்றும் பலர் பங்கேற்றனர். பேரணி கார்டன் சாலை வழியாக சென்று பழங்குடியினர் மையத்தை அடைந்தது.

Similar News

News September 19, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

image

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News September 19, 2025

தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

image

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

News September 19, 2025

நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி!

image

நீலகிரி மாவட்டத்தில் மனித – விலங்கு மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசினகுடி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க மேத்தா என்பவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!