News September 8, 2025

தேனியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

image

கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் பஞ்சம்மாள்(55). இவா் கறவை மாடுகள் வளா்த்து வந்தாா். இதில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. மேலும் பஞ்சம்மாளும் அவரது கணவரும் இலவம் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு விற்பனை செய்து வந்த நிலையில் அதிலும் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News November 15, 2025

தேனி: காசநோய் பாதிப்பால் ஒருவர் தற்கொலை

image

மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்தவர் பங்காரு (49). இவருக்கு காச நோய் ஏற்பட்ட நிலையில் அதற்காக 6மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்தபோதிலும் அவர் மது குடித்து வந்துள்ளார். அதனால் அவருக்கு கடந்த ஒரு மாத காலமாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியின் வேதனையினால் பங்காரு நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News November 14, 2025

தேனி: தலைவலியால் ஒருவர் விஷமருந்தி தற்கொலை.!

image

ஓடைப்பட்டி அருகே கரிச்சிபட்டியை சேர்ந்தவர் முருகன் (47). இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விதத்தின் காரணமாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் 2 தினங்களுக்கு முன்பு முருகன் விஷம் அருந்தி உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (நவ.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 14, 2025

தேனி: ஜூஸ் வியாபரி தற்கொலையில் மர்மம்

image

தஞ்சாவூர், பள்ளிகொண்டான் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (34). இவர் கம்பத்தில் 4 வருடங்களாக ஜுஸ் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமகாத நிலையில் கடையின் அருகே வேலை செய்யும் பொம்முதாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் போலீசார் வழக்கு (நவ.13) பதிந்து விசாரணை.

error: Content is protected !!